Skip to main content

மாத்திப்புடுமா ...உங்க தேர்தலு...?



















தேர்தல்ல தொகுதி ஒதுக்கீட்டுக்கே இம்புட்டு குழப்பம் பண்றீகளே..? நீங்களுவோ ஒண்ணா சேந்து குத்தாட்டம் போட்டு செயிச்சு நாட்ட வெளங்க வைக்க போறீகளா? கதர் சட்டை போட்ட சோனியா காங்கிரசுக்கு எம்புட்டு ஆசை ....ஆத்தாடி? தொகுதிய மட்டும் வக்கனைய வாங்கி செயிச்சு என்னாத்த பண்ணி கிழிக்கப்போற ஆயா நீயி...?????

ரோட்ல எறங்கி எப்பய்யா போராடீ இருக்கு காங்கிரசு? பாத்தியளா...பாத்தியளா.. தேவையில்லாம சொதந்திரம் வாங்கி கொடுத்தானுவோன்னு சொல்லுறீய? இவனுவளா வாங்கி கொடுத்தானுவ.... பெரிசா தேசிய கொடி கலருக்கு ஒரு கட்சிக்கொடிய வச்சிகிட்டு இவனுவோ அடிக்கிற லூட்டி.....நான் சொல்ல மாட்டேன்.. உங்களுவளுக்கே தெரியும்.

ஏஞ்சாமி இவனுவொளுக்கு வேற கலர்ல எதுனாச்சும் கொடிய மாத்திவுடுங்களேன்....????

அது மட்டும் இல்ல...காங்கிரசுங்கறது சொதந்திரத்துக்கு போராடின கச்சி, அந்த பேர படுவா பயலுவளா நீங்க இனிமே வைக்கப்புடாது வேற என்னாமாச்சும் பேர வச்சி செயிச்சுக்கோங்கடா பயலுவலா? பொறவு...மாகாத்மா காந்தின்றவரு நம்ம தேசப்பிதா அல்லாருக்கும் பொதுவான ஆளு அவரு போட்டாவ போட்டு ஓட்டுக் கேக்கபடாது...இப்படி ஏதாச்சும் ஒரு சட்ட திட்டத்த போட்டு இவனுவள சலிச்சு பிரிச்சு எடுங்கப்பா...! நேத்திக்கு அந்த கச்சில உறுப்பினரா சேந்தவன் கூட தியாகி ரேஞ்சுக்கு கொடுக்குற் பில்டப்பு...சாமியோவ்.. தாங்க முடியலடா ....ங்கப்பா!

காலம் போன காலத்துல இவனுவளுக்குன்னு வந்து மாட்டுனாருய்யா திராவிட திலகம். வாழ்க்க புல்லா முடிஞ்சு மவராசன் நிம்மதியா ரெஸ்ட்டு எடுத்து சொச்ச காலத்தையும் போக்க வேண்டிய நேரத்துல நல்லா கேக்குறாருய்யா டீட்டெயிலு..! ஏஞ்சாமி இன்னுமா பதவி ஆச புடிச்சுகிட்டு உலுக்குது உங்கள? பேயாம மூத்தவரையோ இல்லை எளயவரையோ புடிச்சு தமிழ்நாட்டு சனத்துக்கிட்ட கொடுத்துபுட்டு அக்காடான்னு போயி ரெஸ்ட் எடுக்கலாம்ல... ! உம்ம உயிர எடுக்கறதுக்குன்னே... ஒரு அல்டாப்பு கூட்டணியும் உம்ம பேர கெடுக்கறதுக்கே புள்ள குட்டியளும் ....! ரொம்ப கஷ்டமா இருக்குங்க அய்யா உங்க பொழப்ப பாத்தா...

நாட்டை எத்தனவாட்டியோ ஆண்ட மவராசன், இன்னுமா கிடந்து இப்படி அல்லாடிகிட்டு இருக்கணும்.... கூட்டணி அமைச்சு போட்டு....எந்த தொவுதிய ஒதுக்கணும்னு மறுபடியும் சோனியா காங்கிரசு கிட்ட மல்லுக்கட்டு வேற...! ஐயா சாமி.. இந்த கதர் சட்டை போட்ட டுபாக்கூர் எல்லாம் உம்ம தோள்பட்டையில ஏறி செவிய கடிக்கிறானுவோளே... ! வேணுமுன்னே ஊழலை எல்லாம் நடக்கவுட்டு கம்முனு இருத்துபுட்டு... நல்லா அனுப்புறாய்கய்யா சி.பி.ஐ எல்லாம் உம்ம வீட்டுக்க்கு தேர்தல் நேரமா பாத்து....

தனியா மட்டும் நின்னு இருந்திருக்கணும்....காங்கிரசுன்னு ஒரு கச்சியா இருந்துச்சுன்னு..? கேக்குறமாறி செஞ்சுருப்பானுவ நம்மாளுவ? பெரியவரு, தமிழின தலிவரு இப்போ வேற வழியில்லாம உங்கள பிணைய கைதிமாறி புடிச்சு வச்சுகிட்டு பேச்சு நடத்துறானுவளே ரோமாபுரி காங்கிரசு ஆளுக? உங்க வேதனை ரொம்ப கஷ்டமய்யா சாமி...! எம்புட்டு இருந்து என்னங்கய்யா தமிழ் நாட்ல கூலி வேலை பாத்து பொழைக்கிற் ஒரு சாதாரண பொறப்பு கூட நிம்மதியா உறங்கி நிம்மதியா எந்திருக்கும்... ஆனா...உங்க நெலமை.......?

தொகுதி உடன்பாட்டுக்கு காங்கிரசு ஐவர் குழு அமைச்சு இருக்காம்.. ! ஐ.....!!!!! இந்த ஐவர் குழுக்கும் பின்னால ஐம்பாதாயிரம் குழுவுல்ல இருக்கும். இவனுவ பேசி முடிவு பண்ணி ஐஞ்சு பேறா சேர்றதுக்கே எழவு ஒரு மாசம் ஆவும்.. அப்புறம் எப்புடி பேச்சுவார்த்தை நடத்துறது......? எம்புட்டு அராஜகம், அழிச்சாட்டியம் பண்ணிப்புட்டு.. தெகிரியமா தேர்தல்ல கூட்டணி வச்சுப்புட்டாவோ இந்த காங்கிரசு ஆளுக....

இப்படி நீங்களுவோ பண்ற எல்லா கொழப்பத்தையும் பாத்து அம்புட்டையும் சிக்சரா மாத்த விடுமுறை நாயகி, ஓய்வெடுப்பில் காலம் கடத்திய கழக பெண் சிங்கம், கேப்புடன் கூட கைய கோத்துகிட்டு அடுத்த முதல்வராவே கனவுல சஞ்சரிச்சுகிட்டு இருக்கு...! ஆமாம் இன்னும் தேர்தலுக்கு முன்னால அநேகமா...கொல்லூரு கோவிலுக்கு போவும், அப்புறம் குருவாயுருக்கு போவும்... (பயப்படாதீக செயிக்கிறதுக்கு முன்னால போச்சுன்னா.. ஒண்ணியும் பயம் இல்ல.......ஆனா செயிச்ச பின்னால போயி ஒரு ஆனைக்குட்டியும் வாங்கிவிட்டுச்சுன்னா.............எதிரணிக்காரவுக எல்லாம் எச்சரிக்கயா இருந்துகோங்க....)எப்படியும், ரெண்டு மூணு யாகம் செய்யும்....அட.. எல்லாம் மக்க நல்லதுக்குதான் செய்யிதுன்னு நம்புறீகளா? நம்புங்க .. நம்புங்க..

வேற என்னத்த பண்ணி தொலைக்கிறது?

எஞ்சனம் கொள்ளை பேர கொன்னுப்புட்டு ராட்சனனா ஆச்சி பண்ற ராசபக்சே, எதாச்சும் பண்ணி கொறச்சு சீட்டாசும் புடிச்சுபுடலாம்ன்ற கனவுல சோனியா, எப்படியும் செயிச்சு புடலாம்னு கலிஞர் ஐயா, கேப்புடானாச்சும் காப்பத்தமாட்டாறான்னு செயலலிதா அம்மா, எப்படா எவன்டா செயிப்பான் நாமளும் போயி ஓட்டிக்கிட்டு காசுபாப்போம்னு பாக்குற சந்தர்ப்பவாதிய இவுகளுக்கு நடுவுல...

எப்படியாச்சும் இல்ல ஏதாவது ஒரு வழியில் நல்ல பொழைப்பு பொழைக்கமாட்டமான்னு ஆட்காட்டி விரல நீட்டிகிட்டு (வோட்டு மை வைக்கதான்) புறத்தலா... கைய யாருக்கும் தெரியாம நீட்டிகிட்டு (ஹி ஹி ஹி......அது எதுக்குனு சொல்ல மாட்டம்ல) காத்து கெடக்குது எஞ்சனம்....

ஒண்ணுமே நடக்கப்போறதுல்ல பெரிசா...இருந்தாலும் தேர்தலு ஒரு நல்ல டைம்பாஸ் மக்கா....!

பசிக்கிற வவுத்தையும்
எரியாத அடுப்பையும்
பொழைக்க பொழப்பு இல்லாதவனையும்
ஒதுங்க கூரையில்லவதனையும்
உரம் வாங்க காசில்லாதவனையும்
கடலுக்கு போயி சாகுற உசுரையும்

மாத்திப்புடுமா சாமி உங்க தேர்தலு? இல்லை தெரியாமத்தான் கேக்க்குறேன்....


தேவா. S

Photo Courtesy: Mr. Suresh Babu

Comments

Anonymous said…
ஏஞ்சாமி இவனுவொளுக்கு வேற கலர்ல எதுனாச்சும் கொடிய மாத்திவுடுங்களேன்....????//
good boss
Anonymous said…
ஆனா செயிச்ச பின்னால போயி ஒரு ஆனைக்குட்டியும் வாங்கிவிட்டுச்சுன்னா.............எதிரணிக்காரவுக எல்லாம் எச்சரிக்கயா இருந்துகோங்க...//
hahaa
Ha... Ha...

ennathaan nadanthalum nama innum thiruntha mattom anna...

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல