Skip to main content

தவம்....!

























உன்னை தேடும் வேளைகளில்...
வழி நெடுகிலும் பரவவிட்ட
என் இதயத்தின் சப்தமெல்லாம்
மெளனமாய் உன் பெயர் உச்சரிக்கும்
பொழுதுகளிலாவது நினைக்க
மாட்டாயா என்னை?

சராசரியான உன் பார்வை...
காதலாய் எனக்குள் பரிணமித்து
உற்பத்தி செய்த எழுத்துக்களை
சேர்த்துப் பார்க்கும்...பொழுதுகளில்...
வந்து விழும் வரி வடிவத்தில்...
நடைபயிலும் உன் நளினத்தில்
எப்போதும் வார்த்தைகள்...
பிடிப்பட்டதில்லை எனக்கு!

எழுதிய கவிதைகளெல்லாம்
நிராகரிக்கப்படும் பொழுதுகளில்...
மூர்ச்சையான என் காதலும்..
மூர்க்கமான உன் நினைவுகளும்
ஒன்று கூடி என்னை...
கொல்லும் பொழுதுகளிலாவது...
என் நினைவுகளை பரப்புமா உன் மூளை?

உன் விழிகளுக்குள்...
தடுக்கி விழுந்த நானும்....
உனக்காக காத்திருக்கும்
என் கவிதைகளும், காத்திருப்புகளில்...
கழித்துக் கொண்டிருக்கும்..
நாட்களின் விமோசனங்களை...
உன் விழி திறந்து விடுவிக்கும்...
காலம்தான் எப்போது?

ஒரு காதலைச் சொல்ல...
எத்தனை ஜென்மங்களாய்
உன்னைத் தொடருவது...
ஒவ்வொரு முறையும் ...
நிழலாய் என்னருகில் இருக்கிறாய்...
அனலாய் என்னை தகிக்கிறாய்..
மெளனமாய்...என்னைக் கலைக்கிறாய்...!

பொறுமையான பின் தொடர்தலாய்...
மரித்துப் போகின்றன என் நாட்கள்...!
ஒரு முறை என் கண்களைப் பார்...
அதில் ஜென்மாந்திர களைப்பு இருக்கும்...
உனக்கான உயிர் பரவி..
என்னுருவில் அலைகிறது உன் ஆத்மா....
வெளிச்சமும் இருளும்...காற்றும் மழையும்
கணித்துவிட்டன நான் யாரென்று...
கலைந்து அலைந்து கொண்டிருக்கும்
உன் கேசமும் கண்டு பிடித்துவிட்டது
உனக்கானவன் நானென்று....!

ஆனால்....கணிக்கமுடியா..உனக்காக...
இன்னும் எத்தனை ஜென்மமோ....?
இன்னும் எத்தனை அலைதலோ....?

ஒரு ஏக்கத்தோட இருக்குற மாதிரி கவிதை இருந்ததாலேயே எழுதி ரொம்ப நாள் வச்சிட்டேன் என் தொகுப்பிலேயே.... ! ஏன்னா.. மைண்ட் செட் கவிதைக்கு எதிராதான் எப்பவும் இருக்கு மாறக நான் எப்பவுமே இப்டி ஒரு ஃபீல் பண்ணி எல்லாம் கவிதை எழுதினது இல்ல..!

சரி....எப்டியோ தோணிச்சு எழுதிட்டோம்... ட்ரீட் த கவிதை அஸ் கவிதைன்னு சொல்லிட்டு.....போஸ்ட் பண்றேன்.. சோ.. முதல் முறையா என் உணர்வுக்கும் கவிதைக்கும் நோ அட்டாச்மெண்ட் அப்டீன்றத வாசகர்களுக்கு சொல்லிக்கிறது எனக்கு சரின்னு பட்டதால இந்த பாராவ எழுத வேண்டியதாப் போச்சு...!


தேவா. S






Comments

தங்கள் கவிதை அருமை..
வாழ்த்துக்கள்..
படமும் கவிதையும் அழகு!
VELU.G said…
நல்ல கவிதை தேவா


//ஆனால்....கணிக்கமுடியா..உனக்காக...
இன்னும் எத்தனை ஜென்மமோ....?
இன்னும் எத்தனை அலைதலோ....?
//

இதைப் படிக்கும் போது எதிலோ படித்த ஒரு கவிதையின் முதலிரண்டு வரிகள் ஞாபகம் வருகின்றன.

"எத்தனையோ யுகம் ஏகின
இன்னமும் என்னை ஏமாற்றித்திரிகின்றாய்
எத்தனை நாளுன்னை சுற்றினேன்
கதிரவா காதற்பிச்சையின்னும் ஈந்திலாய்....
............."

கதிரவனைச்சுற்றும் பூமிப்பெண்ணின் காதலுக்கு செவிமடுக்காமல் யுகங்களாய் அலையவிடும் கதிரவனே என ஆரம்பிக்கும் கவிதை
Radha N said…
==உன் விழிகளுக்குள்...
தடுக்கி விழுந்த நானும்....==


எத்தனை முறை விழுந்தாலும்
மீண்டும் மீண்டும் எழுந்து......
தடுக்கி விழுவேனடி....
Radha N said…
==.....பொறுமையான பின் தொடர்தலாய்...
மரித்துப் போகின்றன என் நாட்கள்...!
ஒரு முறை என் கண்களைப் பார்...
அதில் ஜென்மாந்திர களைப்பு இருக்கும்...
உனக்கான உயிர் பரவி......==


ஒற்றை பார்வையது,
பட்டு விட்டு போனதால் தான்
என் இதயம்
காற்றில் கரைந்த கற்பூரமானதடி.....
Radha N said…
நண்பரே தங்களுடைய கவிதைகள் அருமை அருமை அருமை.... வாழ்த்துக்கள்
Harini Resh said…
//உன் விழிகளுக்குள்...
தடுக்கி விழுந்த நானும்....
உனக்காக காத்திருக்கும்
என் கவிதைகளும், காத்திருப்புகளில்...
கழித்துக் கொண்டிருக்கும்..
நாட்களின் விமோசனங்களை...
உன் விழி திறந்து விடுவிக்கும்...
காலம்தான் எப்போது?//

அதுதான் யாருக்கும் தெரியுதில்ல அண்ணா.:(
அருமையா இருக்குது உங்க கவிதை
//உன் விழிகளுக்குள்...
தடுக்கி விழுந்த நானும்....
உனக்காக காத்திருக்கும்
என் கவிதைகளும், காத்திருப்புகளில்//

மிகவும் அருமை.
ஹேமா said…
ஏக்கமும் காதலும் கலந்து தவிக்கிறது கவிதை !
//ஒரு காதலைச் சொல்ல...
எத்தனை ஜென்மங்களாய்
உன்னைத் தொடருவது...
ஒவ்வொரு முறையும் ...
நிழலாய் என்னருகில் இருக்கிறாய்...
அனலாய் என்னை தகிக்கிறாய்..
மெளனமாய்...என்னைக் கலைக்கிறாய்...!///

...ஹ்ம்ம்ம்.. வார்த்தையில் சொல்ல முடியாத அளவு ரசிக்கக் கூடிய கவிதை வரிகள்...!

...உங்கள் தவத்திற்கு சீக்கிரம் வரம் கிடைக்க வாழ்த்துக்கள்..!

(பின் குறிப்புல சொன்னத நம்பிட்டேன்) :-))
www.classiindia.com Top India Classified website . Post One Time & get Life time Traffic.

New Classified Website Launch in India - Tamil nadu

No Need Registration . One time post your Articles Get Life time
Traffic. i.e No expired your ads life long it will in our website.
Don't Miss the opportunity.
Visit Here -------> www.classiindia.com
Anonymous said…
கவிதை நன்றாகவே உள்ளது நண்பரே! வாழ்த்துக்கள்!
''
ஆனால்....கணிக்கமுடியா..உனக்காக...
இன்னும் எத்தனை ஜென்மமோ....?
இன்னும் எத்தனை அலைதலோ....?

கணித்துவிட்டால் காதல் முடிந்துவிடுமா என்ன!!! கணிக்காமல் விட்டால்தானே ஜென்மம் ஜென்மமாக அலையமுடியும்..

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த