Skip to main content

தவம்....!

























உன்னை தேடும் வேளைகளில்...
வழி நெடுகிலும் பரவவிட்ட
என் இதயத்தின் சப்தமெல்லாம்
மெளனமாய் உன் பெயர் உச்சரிக்கும்
பொழுதுகளிலாவது நினைக்க
மாட்டாயா என்னை?

சராசரியான உன் பார்வை...
காதலாய் எனக்குள் பரிணமித்து
உற்பத்தி செய்த எழுத்துக்களை
சேர்த்துப் பார்க்கும்...பொழுதுகளில்...
வந்து விழும் வரி வடிவத்தில்...
நடைபயிலும் உன் நளினத்தில்
எப்போதும் வார்த்தைகள்...
பிடிப்பட்டதில்லை எனக்கு!

எழுதிய கவிதைகளெல்லாம்
நிராகரிக்கப்படும் பொழுதுகளில்...
மூர்ச்சையான என் காதலும்..
மூர்க்கமான உன் நினைவுகளும்
ஒன்று கூடி என்னை...
கொல்லும் பொழுதுகளிலாவது...
என் நினைவுகளை பரப்புமா உன் மூளை?

உன் விழிகளுக்குள்...
தடுக்கி விழுந்த நானும்....
உனக்காக காத்திருக்கும்
என் கவிதைகளும், காத்திருப்புகளில்...
கழித்துக் கொண்டிருக்கும்..
நாட்களின் விமோசனங்களை...
உன் விழி திறந்து விடுவிக்கும்...
காலம்தான் எப்போது?

ஒரு காதலைச் சொல்ல...
எத்தனை ஜென்மங்களாய்
உன்னைத் தொடருவது...
ஒவ்வொரு முறையும் ...
நிழலாய் என்னருகில் இருக்கிறாய்...
அனலாய் என்னை தகிக்கிறாய்..
மெளனமாய்...என்னைக் கலைக்கிறாய்...!

பொறுமையான பின் தொடர்தலாய்...
மரித்துப் போகின்றன என் நாட்கள்...!
ஒரு முறை என் கண்களைப் பார்...
அதில் ஜென்மாந்திர களைப்பு இருக்கும்...
உனக்கான உயிர் பரவி..
என்னுருவில் அலைகிறது உன் ஆத்மா....
வெளிச்சமும் இருளும்...காற்றும் மழையும்
கணித்துவிட்டன நான் யாரென்று...
கலைந்து அலைந்து கொண்டிருக்கும்
உன் கேசமும் கண்டு பிடித்துவிட்டது
உனக்கானவன் நானென்று....!

ஆனால்....கணிக்கமுடியா..உனக்காக...
இன்னும் எத்தனை ஜென்மமோ....?
இன்னும் எத்தனை அலைதலோ....?

ஒரு ஏக்கத்தோட இருக்குற மாதிரி கவிதை இருந்ததாலேயே எழுதி ரொம்ப நாள் வச்சிட்டேன் என் தொகுப்பிலேயே.... ! ஏன்னா.. மைண்ட் செட் கவிதைக்கு எதிராதான் எப்பவும் இருக்கு மாறக நான் எப்பவுமே இப்டி ஒரு ஃபீல் பண்ணி எல்லாம் கவிதை எழுதினது இல்ல..!

சரி....எப்டியோ தோணிச்சு எழுதிட்டோம்... ட்ரீட் த கவிதை அஸ் கவிதைன்னு சொல்லிட்டு.....போஸ்ட் பண்றேன்.. சோ.. முதல் முறையா என் உணர்வுக்கும் கவிதைக்கும் நோ அட்டாச்மெண்ட் அப்டீன்றத வாசகர்களுக்கு சொல்லிக்கிறது எனக்கு சரின்னு பட்டதால இந்த பாராவ எழுத வேண்டியதாப் போச்சு...!


தேவா. S






Comments

தங்கள் கவிதை அருமை..
வாழ்த்துக்கள்..
படமும் கவிதையும் அழகு!
VELU.G said…
நல்ல கவிதை தேவா


//ஆனால்....கணிக்கமுடியா..உனக்காக...
இன்னும் எத்தனை ஜென்மமோ....?
இன்னும் எத்தனை அலைதலோ....?
//

இதைப் படிக்கும் போது எதிலோ படித்த ஒரு கவிதையின் முதலிரண்டு வரிகள் ஞாபகம் வருகின்றன.

"எத்தனையோ யுகம் ஏகின
இன்னமும் என்னை ஏமாற்றித்திரிகின்றாய்
எத்தனை நாளுன்னை சுற்றினேன்
கதிரவா காதற்பிச்சையின்னும் ஈந்திலாய்....
............."

கதிரவனைச்சுற்றும் பூமிப்பெண்ணின் காதலுக்கு செவிமடுக்காமல் யுகங்களாய் அலையவிடும் கதிரவனே என ஆரம்பிக்கும் கவிதை
Radha N said…
==உன் விழிகளுக்குள்...
தடுக்கி விழுந்த நானும்....==


எத்தனை முறை விழுந்தாலும்
மீண்டும் மீண்டும் எழுந்து......
தடுக்கி விழுவேனடி....
Radha N said…
==.....பொறுமையான பின் தொடர்தலாய்...
மரித்துப் போகின்றன என் நாட்கள்...!
ஒரு முறை என் கண்களைப் பார்...
அதில் ஜென்மாந்திர களைப்பு இருக்கும்...
உனக்கான உயிர் பரவி......==


ஒற்றை பார்வையது,
பட்டு விட்டு போனதால் தான்
என் இதயம்
காற்றில் கரைந்த கற்பூரமானதடி.....
Radha N said…
நண்பரே தங்களுடைய கவிதைகள் அருமை அருமை அருமை.... வாழ்த்துக்கள்
Harini Resh said…
//உன் விழிகளுக்குள்...
தடுக்கி விழுந்த நானும்....
உனக்காக காத்திருக்கும்
என் கவிதைகளும், காத்திருப்புகளில்...
கழித்துக் கொண்டிருக்கும்..
நாட்களின் விமோசனங்களை...
உன் விழி திறந்து விடுவிக்கும்...
காலம்தான் எப்போது?//

அதுதான் யாருக்கும் தெரியுதில்ல அண்ணா.:(
அருமையா இருக்குது உங்க கவிதை
//உன் விழிகளுக்குள்...
தடுக்கி விழுந்த நானும்....
உனக்காக காத்திருக்கும்
என் கவிதைகளும், காத்திருப்புகளில்//

மிகவும் அருமை.
ஹேமா said…
ஏக்கமும் காதலும் கலந்து தவிக்கிறது கவிதை !
//ஒரு காதலைச் சொல்ல...
எத்தனை ஜென்மங்களாய்
உன்னைத் தொடருவது...
ஒவ்வொரு முறையும் ...
நிழலாய் என்னருகில் இருக்கிறாய்...
அனலாய் என்னை தகிக்கிறாய்..
மெளனமாய்...என்னைக் கலைக்கிறாய்...!///

...ஹ்ம்ம்ம்.. வார்த்தையில் சொல்ல முடியாத அளவு ரசிக்கக் கூடிய கவிதை வரிகள்...!

...உங்கள் தவத்திற்கு சீக்கிரம் வரம் கிடைக்க வாழ்த்துக்கள்..!

(பின் குறிப்புல சொன்னத நம்பிட்டேன்) :-))
www.classiindia.com Top India Classified website . Post One Time & get Life time Traffic.

New Classified Website Launch in India - Tamil nadu

No Need Registration . One time post your Articles Get Life time
Traffic. i.e No expired your ads life long it will in our website.
Don't Miss the opportunity.
Visit Here -------> www.classiindia.com
Anonymous said…
கவிதை நன்றாகவே உள்ளது நண்பரே! வாழ்த்துக்கள்!
''
ஆனால்....கணிக்கமுடியா..உனக்காக...
இன்னும் எத்தனை ஜென்மமோ....?
இன்னும் எத்தனை அலைதலோ....?

கணித்துவிட்டால் காதல் முடிந்துவிடுமா என்ன!!! கணிக்காமல் விட்டால்தானே ஜென்மம் ஜென்மமாக அலையமுடியும்..

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...