Skip to main content

நின்னையே ரதியென்று....!


















தண்ணீர் குடத்தோடு
நீ தலைகுனிந்துதான்
நடக்கிறாய்....
இடுப்பில் இருக்கும்..
குடத்துக்கு என்னவாம் கிண்டல்
என்னை பார்த்து...?
தளும்பி தளும்பி சிரிக்கிறது!

***

இல்லை என்றேன்....
இருக்கிறது என்றாய்!
இருக்கிறது என்றேன்
இல்லை என்றாய்...!
இருந்தும் இல்லாமல்
இருக்கும் காதலை
எப்படித்தான் கண்டு பிடிப்பதாம்....
செல்லமாய் நீ சிணுங்கினாய்..
கம்பீரமாய் வெளிப்பட்டு
சிரித்தது ஒரு ஒய்யாரக்காதல்!

***

ஒரு மரம் துளிர்க்கும் தருணம்;
சாரலாய் முகத்தில் மழைத்துளிகள்
தவழும் பொழுதுகள்;
ஒரு ஊதக்காற்று உடல் ஊடுருவி
உள்ளம் கலைத்து செல்லும்
அந்த அற்புதகணம்;
ஒரு கவிதை எழுதி முடித்து
நிறைவாய் சாய்ந்து நெஞ்சு
நிறையும் நிமிடம்;
யாருமே இல்லாமல் அவளோடு
இருக்கும் மெளனம்;
இன்ன பிற எல்லாம் சேர்ந்ததுதான்
காதலா?

***

கனவுகளில் வடித்த
ஒரு ஓவியத்தை
எப்படி உனக்கு பரிசளிப்பேன்?
என் கவிதைகளில் ஒளிந்திருக்கும்
உயிரை எப்படி நான் அசையவைப்பேன்?
சொல்லாமல் தவிக்கும்
என் காதலின் அவஸ்தைகள் எல்லாம்
ஒரு மழையில் நடுங்கும் குருவியாய்
நடுங்கிக் கொண்டிருப்பதை
எப்படி உனக்கு உணரவைப்பேன்...?
எங்கேயோ இருக்கும் உன்னை
துரத்தி துரத்தி சுற்றி கொண்டிருக்கும்
என் நினைவுகளின் ஸ்பரிசங்கள்
எல்லாம் வார்தைகளற்று ஏக்கமாய்
உன்னை உற்று நோக்கும் நொடியில்
சொல்லித்தான் விடமாட்டாயா
ஒற்றை வார்த்தையில் உன் காதலை...?

***

மனதால் வானத்தின் மேகங்களை
எல்லாம் கலைத்துப் போட்டு
தீட்டி வைக்கிறேன் ஓராயிரம்
ஓவியங்களை தூரிகைகளின்றி...,
எங்கிருந்தேனும் கண்டுவிட மாட்டாயா?
கலைந்து கிடக்கும் வானத்து ஒவியத்தில்
ஒளிந்து கிடக்கும் என் மனதை?


தேவா. S

Comments

க ரா said…
வாரியார்னு பேரு.. எழுதறது முழக்க.. இம்ம்.. கலி முத்தி போச்சுன்னா :)
dheva said…
கண்ணன் @ அடே....தம்பி நான் என்ன கிருபானந்த வாரியர்னா வச்சு இருக்கேன் பேரு.......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் கலக்கிட்ட போ....!
//தம்பி நான் என்ன கிருபானந்த வாரியர்னா வச்சு இருக்கேன் பேரு.......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் //

......ROFL... முடியல... :-))

நா நெனச்சு வேற பாத்துட்டேன். ஹா ஹா ஹா.. :-))

சும்மா இருக்க மாட்டீங்களாங்க நீங்க..!
உன்னை உற்று நோக்கும் நொடியில்
சொல்லித்தான் விடமாட்டாயா
ஒற்றை வார்த்தையில் உன் காதலை...?........


...உணர்வுகள் வரிசையாய் கோர்க்க் பட்ட ......அழகான் கவிதை .
கெஞ்சும் காதல் ஏங்கும் இதயம். பாராட்டுக்கள்.
//எங்கிருந்தேனும் கண்டுவிட மாட்டாயா?
கலைந்து கிடக்கும் வானத்து ஒவியத்தில்
ஒளிந்து கிடக்கும் என் மனதை?
///

...வார்த்தைகளின் அணிவகுப்பில் அசத்திட்டீங்க...!

...ஒளிந்து கிடக்கும் உங்கள் உன்னதக் காதல், கலையாமல் அவளிடம் சென்றிருக்கும்...! :)
///மனதால் வானத்தின் மேகங்களை
எல்லாம் கலைத்துப் போட்டு
தீட்டி வைக்கிறேன் ஓராயிரம்
ஓவியங்களை தூரிகைகளின்றி...,///

நல்ல அருமையான வரிகள்... மனதின் எண்ணங்கள் ஓவியங்களாக...

எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை மூணு!
வினோ said…
/ இன்ன பிற எல்லாம் சேர்ந்ததுதான்
காதலா? /

ஆமாம் கண்டிப்பா.. எல்லாம் சேர்த்ததுதான்
ஹேமா said…
இன்ன பிற சேர்ந்துதான் காதல்.எப்படிக் காதலை எழுதினாலும் அழகுதான்.ஆனால் குடம் தளும்பிச் சிரிப்பது மிகவும் ரசனை !
அருமையான வரிகள!
அன்பு தேவா, சிந்திய குடத்து நீரில் சிந்துகிறது என் சிந்தனைகள். அள்ள முடியா வெள்ளத்தை கைகளில் கட்டவிழ்த்து கவிதையாய் உலவ விட்டிருக்கிறீர். மிக இரசித்தேன்.. தேன்.

தொடருங்கள். வாழ்த்துகள்.
உணர்வுகளால் கோர்க்கப்பட்ட அழகான கவிதை.
தண்ணீர் குடத்தோடு
நீ தலைகுனிந்துதான்
நடக்கிறாய்....
இடுப்பில் இருக்கும்..
குடத்துக்கு என்னவாம் கிண்டல்
என்னை பார்த்து...?
தளும்பி தளும்பி சிரிக்கிறது!///

அது சிரிக்கிறதுக்கு அர்த்தம் வேறங்கோ...
இல்லை என்றேன்....
இருக்கிறது என்றாய்!
இருக்கிறது என்றேன்
இல்லை என்றாய்...!
இருந்தும் இல்லாமல்
இருக்கும் காதலை///

ஓஹ sj சூர்யா சொல்வாரே இருக்கு இல்லை அதுவா..????
மனதால் வானத்தின் மேகங்களை
எல்லாம் கலைத்துப் போட்டு
தீட்டி வைக்கிறேன் ஓராயிரம்
ஓவியங்களை தூரிகைகளின்றி...,
எங்கிருந்தேனும் கண்டுவிட மாட்டாயா?
கலைந்து கிடக்கும் வானத்து ஒவியத்தில்
ஒளிந்து கிடக்கும் என் மனதை?////

எந்த மனம்....??? ஓஹ அந்த மனத்தை தானே சொல்றீங்க...????
Anonymous said…
நா நெனச்சு வேற பாத்துட்டேன். ஹா ஹா ஹா.. :-))

சும்மா இருக்க மாட்டீங்களாங்க நீங்க..!//

nanum ... he he he he
Anonymous said…
பேசும் போதும் மிரட்டுறது
காதல் கவிதை எழுத்தும் போது இப்பிடி
ஐயோ ஐயோ

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த