Skip to main content

என்னதான் செய்வாய் நீ...?




















இரு இதய துடிப்புகளுக்கு
இடையே நிசப்தமாய்
பரவிக் கிடக்கிறது
உன் நினைவுகள்..!

ஒரு பேய் மழை
மனதுக்குள் இடியாய் பெய்து
வார்த்தைகளில் சாரலாய்
அள்ளித் தெறிக்கும் கவிதைகளை
நான் உன் மீதான காதல் என்கிறேன்!!!!

சாலையோரப் பேருந்தில்
ஜன்னலோரம் உன்னைக் கண்டு
சட்டென்று கூப்பிடத் தோன்றிய
ஆசையை அடக்கிக் கொண்டு
தூரமாய் உன்னை ரசித்து
நகர்கிறது என் சுவாரஸ்ய புத்தி!

அடிக்கடி மணி பார்க்க
நீ உன் மணிக்கட்டை பார்க்கும்
பொழுதில் மட்டும்
நேருக்கு நேராய் உன் முகம் பார்த்து
நெற்றியிலிருக்கும் வியர்வையை
என் நினைவுகளால் துடைக்கிறேன்!

தொட்டு விடும் தூரத்தில்
இருக்கும் உன்னை
எட்ட நின்று காணும் பொழுதுகளில்
இரு சிறகுகள் முளைத்து
மேக வானில் பறக்கிறேன்..!

ஒரு புல்லாங்குழலின்
இசையின் மீதமர்ந்து
எட்ட முடியாத் திசைகளையும்
கடந்தே விடுகிறேன்..!

எதிர் பாராமல்
உன்னைக் காணும்
அந்த தினத்தின் வினாடிகளில்
என்னதான் செய்வாய் நீ
என்றென்ணும் கனவுகளில்
கடக்கிற நிகழ் கால
நிமிடங்களுக்குத் தெரியுமா
நம் கண்களில் துளிர்க்கும்
கண்ணீரில் படிந்திருக்கும்
ஒரு களங்கமற்ற காதலைப் பற்றி?


தேவா. S



Comments

கவிதை நல்லா இருக்குங்க
Chitra said…
தொட்டு விடும் தூரத்தில்
இருக்கும் உன்னை
எட்ட நின்று காணும் பொழுதுகளில்
இரு சிறகுகள் முளைத்து
மேக வானில் பறக்கிறேன்..!


.... very nice.....ஆத்மார்த்தமா எழுதி இருக்கீங்க.
//எதிர் பாராமல்
உன்னைக் காணும்
அந்த தினத்தின் வினாடிகளில்
என்னதான் செய்வாய் நீ//

...ஹம்ம்ம்ம்.. வேற என்ன பண்ணுவாங்க? இத்தனை நாள் எதிர் பார்த்திருந்த ஆசைகள் எல்லாம் கொட்டித் தீர்த்து... எட்டிப் பறந்தே காதல் வானில் சிறகடிப்பீங்க.

ரொம்ப பிடிச்சிருந்தது. :)
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
//சாலையோரப் பேருந்தில்
ஜன்னலோரம் உன்னைக் கண்டு
சட்டென்று கூப்பிடத் தோன்றிய
ஆசையை அடக்கிக் கொண்டு
தூரமாய் உன்னை ரசித்து
நகர்கிறது என் சுவாரஸ்ய புத்தி!//

சும்மா ரசிச்சுட்டே நின்னுட்டிருந்தா பஸ் போயிடுமே :-))))

கவிதை ரொம்ப நல்லாருக்கு. ரசிச்சேன்.
நேருக்கு நேராய் உன் முகம் பார்த்து
நெற்றியிலிருக்கும் வியர்வையை
என் நினைவுகளால் துடைக்கிறேன்!///

ஏன் உண்மையா துடைக்க வேண்டி தானே அது என்ன நினைவுகளால்
அடிக்கடி மணி பார்க்க
நீ உன் மணிக்கட்டை பார்க்கும்
பொழுதில் மட்டும்
நேருக்கு நேராய் உன் முகம் பார்த்து
நெற்றியிலிருக்கும் வியர்வையை
என் நினைவுகளால் துடைக்கிறேன்..

நன்றாக இருக்கிறது.... :)
///////தொட்டு விடும் தூரத்தில்
இருக்கும் உன்னை
எட்ட நின்று காணும் பொழுதுகளில்
இரு சிறகுகள் முளைத்து
மேக வானில் பறக்கிறேன்..!/////////


வார்த்தை அலங்காரம் அருமை நண்பா . எதார்த்த வரிகள் கவிதைக்கு மேலும் மெருகூட்டி இருக்கிறது . வாழ்த்துக்கள்
Ram said…
அட அருமையான வார்த்தை கோர்வைகள்.. திணிக்கப்பட்டது போன்ற எணர்வே எந்த வார்த்தைகளிலும் வராதது மிகவும் சிறப்பானது... அப்படி பார்க்கையில் உங்கள் எழுத்து சிறப்பாக இருக்கிறது..
ஹேமா said…
புல்லாங்குழல் இசையில் அமர்ந்து பறக்கும் காதல் அழகு !
நல்ல கவிதை.
வித்தியாசமான திறமைகள் இருக்கின்றன. ஒரு பதிவில் பேய்க்கு பயப்பட வைக்கிறீர்கள். இருநூறாவது பதிவில் அழ வைத்து விட்டீர்கள். கவிதை பதிவு வித்தியாசமான அனுபவம்.
உங்களது திறமைகளை நன்கு வளர்த்துக் கொள்ளுங்கள். நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
நான் உங்கள் எழுத்துக்கு ரசிகன் தேவா.
வாழ்த்துக்கள் தேவா.
>>>தொட்டு விடும் தூரத்தில்
இருக்கும் உன்னை
எட்ட நின்று காணும் பொழுதுகளில்
இரு சிறகுகள் முளைத்து
மேக வானில் பறக்கிறேன்..!

பக்கத்து வீட்லயே லவ்வரை வெச்சுக்கிட்டு.. ஹி ஹி

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த