Skip to main content

ஏதேனும் ஒரு ஜென்மத்தில்.....!




















கடக்க முடியாத தூரங்களை
உடைத்துப் போடும் முயற்சிகளில்
தெறித்து விழும் கண்ணீர் துளிகள்
உன்னை தேடியே வருகின்றன.

கனவுகளை கொடுத்தவள்
என்னை நினைவற்றவனாய் போவதற்கு
சபித்து விட்டு பொய்யாய்
தொலைகிறேன் என்றாள்...
மெய்யாய் என்னைச் சுற்றிக் கொண்டு!

மெளனத்தால் மெளனத்தை மோதவிட்டு
நிசப்தங்களில் கலவரத்தை பரவ விட்டு
நெஞ்சுக்குள் அமிலமாய் சுரக்கிறது
கடந்த கால நினைவுகளில் கரைந்து கிடக்கும்
ஒரு தோற்றுப் போன காதல்!

நமது நேசிப்புகளை அழித்துப் போட்ட
சூழலை எரித்துப் போட
பதத்துப் போன என் உணர்வுகளை
உரசி உரசி உயிரைக் கரைக்கும்
முயற்சிகளில் கழிந்து கொண்டிருக்கிறது
சம காலப் பொழுதுகள்!

அகண்ட வெளியின் நாக்குகளில்
பரவிக் கிடக்கும் மதுரசமென
வழிந்து பெருகும் காதலை
ஏடன் தோட்டத்து ஆப்பிளென
நான் சுவைக்க நினைக்கையில்
ஒரு சாத்தானாய் காலம்
உடைகளை பிடுங்கிய நம் பிரிவின்
வெற்றியில் நகைத்து நகர்கிறது!

ஒரு தண்ணீரில்லா கிணறின்
விளிம்பு வரை பயணித்த
ஒரு சொறித்தவளையின் தோல்வி போல
உன்னை மறக்க முயலும் விளிம்புகளில்
சறுக்கி சறுக்கி விழுகிறேன்
உன் நினைவுக் கேணிக்குள்!

வாராய் என்றறிந்தும்; உனை காணேன்
என்றுணர்ந்தும்; ஐந்தெழுத்து மந்திரத்தை
ஓதி ஓதி பேரிறையக் காணும் முயற்சி போல
நானும் எழுதிக் கொண்டே இருக்கிறேன்
உனக்கான கவிதைகளை....
ஏதேனும் ஒரு ஜென்மத்தில்
உன்னோடு ஒன்று சேரும் ஆசையோடு!


தேவா. S

Comments

அழகாக, ஆழமாக பேசியது வலியை - கவிதை.
Chitra said…
ஒரு தண்ணீரில்லா கிணறின்
விளிம்பு வரை பயணித்த
ஒரு சொறித்தவளையின் தோல்வி போல
உன்னை மறக்க முயலும் விளிம்புகளில்
சறுக்கி சறுக்கி விழுகிறேன்
உன் நினைவுக் கேணிக்குள்!


.... உவமைகளும் - உணர்வுகளும் கை கோர்த்து சரளமாக வந்து இருக்கும் கவிதை.
sakthi said…
வெகு நாட்களுக்கு பின் ஒரு முழுமையான கவிதை படித்த திருப்தி

பதத்து போன உணர்வுகள்

புதிய சொல்லாடல்

நிசப்தங்களில் கலவரத்தை பரவ விடல்

வெகு அருமையான உவமை

நன்று தேவா

நல்ல முன்னேற்றம்

தொடருங்கள்

Popular posts from this blog

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

முரட்டுக் காளை....!

தலைவரை பத்தி எழுத சொல்லிட்டு தம்பி அருண் பாட்டுக்கு போய்ட்டான்....! நாம ஏற்கனவே ரஜினினு சொன்னாலே பத்திகிட்டு எரிவோம்....இதுல பெட்ரோல வேற ஊத்துன எப்டி? ....சும்மா பத்திகிட்டு எரியும்ல..எரிமலை மாதிரி..ஹா...ஹா..ஹா...! தலிவர் படத்த லிஸ்ட் எல்லாம் பண்ண முடியாது.. என்ன பொறுத்த வரைக்கும்....எல்லாமே... நம்பர் 1 தான்...!!! இது எப்டி இருக்கு....ஸ்ட்ரெய்ட்டா மேட்ருக்குள்ள போவமா....இப்டிச் சூடு..... முரட்டுக்காளை (1980) படம் போட்ட கொஞ்ச நேரத்துல நான் பயந்தே போய்ட்டேன்....! ஒரு காளை மாடு முரட்டுத்தனமா நிக்கும் போது.. அத அடக்க சிங்கம் மாதிரி நம்ம சூப்பர் ஸ்டார்.....! என்னோட கவலை எல்லாம் தலிவருக்கு ஒண்ணும் ஆகக்கூடாதுன்னுதான்....அது எப்டி ஆகும் தலைவர் சும்மா பிரிச்சு மேஞ்சு காளைய அடக்குற வரைக்கும் பக்கத்து சீட்ல இருந்த ஆள டேமேஜ் ஆக்கிட்டேன்...ஜு ஜு பி....!எப்பவுமே தலிவர் படம்னா...அப்டிதான்...இஹ் ஹா...ஹா ஹா..! அதுக்கு அப்புறம் வர்ற பாட்டு...நான் சொல்ல தேவயில்ல..உங்க ஹிட் இல்ல எங்க ஹிட் இல்ல.. உலக ஹிட்.... தமிழ் சினிமாவுக்கே பஞ்சர் பாத்த படம்.... ! எங்க ஊர்..(எந்த ஊர்னு கேட்டா ரூட்டு மாறிடும்...ட்ராக்க ...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...