Skip to main content

முல்லைப் பெரியாறு...!



















வற்றிப் போன நதியின்
தழும்புகளை கண்களால்
தடவிக் கொண்டிருக்கிறேன்...
ஏதேதோ நினைவுகள்
வேகமாய் உட்புகுந்து
செரித்துப் போடுகிறது
வாழ்வியலின் சுவாரஸ்யங்களை...

அதோ அங்கே.. ஒரு மீன் கூட்டம்
துள்ளிக் குதித்திருக்கலாம்...
இதோ இந்த நடுக்கல்லின் மீது
நாரைகள் அமர்ந்து...
சிறகுலர்த்தியிருக்கலாம்...

கரையோர அந்த மரத்தடியில்
யாரேனும் அமர்ந்து
மீன்களுக்காக தூண்டில்
வீசியிருக்கலாம்..

சுருண்டு கிடக்கும்
இரு கரையோரங்களிலும்
காற்றோடு கூடி
சிறு அலைகளாய் நீர்
சிணுங்கியிருக்கலாம்...

சிறு பூச்சிகள்
ரீங்காரமிட்டுக் கொண்டு
நீரின் மேல் மிதந்து, மிதந்து
ஊர்வலங்கள்...
போயிருக்கலாம்...

பசித்து இவ்வழி கடந்த
ஏதேனும் ஒரு ஜீவராசியின்
இரைப்பைக்கு தன்
கருப்பையிலிருந்து நீர் கொடுத்து
தாகம் தீர்த்திருக்கலாம்..

குருதியைப் போல
தன்னைக் கொடுத்து
வயல் வெளிகளில் விளைச்சலாய்
நிறைந்து மானுடரின்
வாழ்க்கையாய் இருந்திருக்கலாம்

இதோ வறண்டு கிடக்கிறது
இந்த நதி...
பக்கத்திலேயே துணைக்காய்
செத்துக் கிடக்கும்
விவசாய நிலங்களோடு....

கடந்த கால நினைவுகளை
ஏந்திக் கொண்டு காய்ந்து
கிடக்கும் இந்த இடத்தில்
நதியென்று ஒன்றுமே இருந்தத்தில்லை
என்று யாரேனும்...
மறுக்கவும் கூட செய்யலாம்!

முன்பு இங்கு ஒரு
நதி இருந்தது....
அதற்கு சுவாசமாய் ஒரு
அணை இருந்தது!
அதனால் எம்மக்களுக்கு ஒரு
வாழ்க்கை இருந்தது
என்பதை நாமே கூட
மறந்தும் கூட போகலாம்....!

ஆனால்...

சுவடுகளைச் சுமந்து கொண்டு
துருத்திக் கொண்டிருக்கும்
எலும்புகளாய் கிடக்கும்....
அந்த அணையின்
எச்சங்களில் ஒட்டியிருக்கும்
ஒரு துரோக வரலாற்றை
கண்ணீரோடு காற்றும், காலமும் கூட
வாசிக்காமலா போய் விடும்..!

முல்லைப் பெரியாறு அணை உடைபட்டு விடக்கூடாது என்று கடுமையாய் போராடிக் கொண்டிருக்கும் அதே வேளையில், இப்போது உள்ள அணையை உடைத்து விட்டு வேறு ஒரு அணையை புதிதாய் கேரள அரசு கட்டினால் என்னவெல்லாம் ஆகும்...? என்ற ஒரு அக்கறை தமிழக மக்களிடம் மிகையாக பரவலாக இல்லை என்னும் உண்மை நெஞ்சை சுடாமல் இல்லை.!

இந்த அணையை உடைத்து விட்டால் என்னவாகும் என்று யோசித்த போது ஏற்பட்ட வலியை வார்த்தைகளாக்கி இருக்கிறேன்....!

எழுதும் போதே கண்ணீரில் நனைந்து வெளியே வந்த வார்த்தைகளில் இருந்த சோகத்தை தாங்கவே முடியவில்லை...நிஜத்தில் நிகழ்ந்தால் அது எவ்வளவு பெரிய கொடுமையாகும் என்று கற்பனை செய்தும் பார்க்க இயலவில்லை.

முல்லைப் பெரியாறு தென் தமிழகத்து வானம் பார்த்த மக்களின் வாழ்வாதாரம். இங்கே அரசியல் சூழ்ச்சிகளால் நிகழ்த்தப் பெறும் யாதொரு கொடுமையையும் அறியாத எம்மக்களை வஞ்சம் தீர்க்க நினைக்கும் மனிதர்கள் சுயநலபோக்குகளை கைவிட்டு எம்மின் வயிற்றுப் பசியினையும் வறுமையின் கோரத்தினையும் உணர வேண்டும்.

பென் குவிக் என்னும் ஒரு வெள்ளைக்காரனுக்கு இருந்த கருணை மனத்தை அன்போட் எமது இரத்த சொந்தங்களான கேரளத்து மக்கள் உணர வேண்டும். அரசியல் நகர்வுகளை விட்டு வெளி வந்து எல்லா வகையிலும் தனக்கு உதவியாய் இருக்கும் தமிழக மக்களின், அதுவும் வானம் பார்த்த பூமியில் முல்லை பெரியாறு நீருக்காக காத்திருக்கும் ஏழை விவாசாயிகளின் இரத்தத்தை எப்படியெல்லாம் புதிய அணை உறிஞ்சிக் கொண்டு எம்மவரை எலும்புக் கூடுகளாக்கும் என்பதை உணரவேன்டும்.

தமிழக அரசும், தமிழக அரசியல்வாதிகளும் நேர்மையாய் இதை எடுத்துக் கூறி பிணக்குகள் இல்லாமல் நமது உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும்...!

இந்த பிரச்சினைக்கு பின்னால் இருப்பது வெறும் நதி மட்டுமல்ல....

கோடாணு கோடி மக்களின் ....தலைமுறைகள் கடந்த வாழ்க்கை...!

தேவா. S

Comments

Prabu Krishna said…
ம்ம் உண்மைதான் அண்ணா. இங்கே ஒருவர் ஒரு விசயத்துக்கு ஆதரவு தெரிவித்தால் இன்னொருவர் எதிர்ப்பு தெரிவிக்கிறார். கொடுமை.
முல்லைப் பெரியாறும் துரோகத்தின் வரலாறும் -பாகம் ஒன்று
தவிர்க்க முடியாத சிக்கல்களால் நின்று போன முல்லைப்பெரியாரும் துரோக வரலாறும் தொடர் மீண்டும் தொடர்கிறது, உங்களுக்காக தொடர் ஒன்று முதல்...

முல்லைப் பெரியாறும் துரோகத்தின் வரலாறும் -பாகம் ஒன்று
நாரைகள் அமர்ந்து...
சிறகுலர்த்தியிருக்கலாம்...//
அடடா !!
சரியாக முடிவு எடுக்கத் தெரியாத தலைமை எல்லா திசையும் பிரச்னைகள் பிறப்பெடுக்க வழி வகுக்கும்

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த