சாத்தானை படைத்த எரிச்சலில்
மனிதனை படைக்கவே கூடாது
என்ற கடவுளின் ஆசையை உடைத்து விட்டு
மனிதனை படைத்தே விட்டான் சாத்தான்...
கடவுளைக் கொன்று விட்டு;
மனிதனோ மீண்டும் மீண்டும்
சாத்தானை படைத்து விட்டு
அதற்கு கடவுள் என்று பெயரிட்டுக் கொண்டிருக்கிறான்;
ஆமாம்...
கடவுளை மனிதன் படைத்து விடக் கூடாது
என்ற கடவுளின் ஆசை தோற்றுப் போனதில்
சாத்தான் மீண்டும் மீண்டும் ஜெயித்துக் கொண்டிருக்கிறான்
கடவுள் என்ற பெயரோடு.....!
***
அந்தக் கதையை நான் வாசிக்கையில்
கதையின் நாயகியின் பெயர்
அவளுடைய பெயராய் இருந்தை வாசித்து
புத்தகத்தை மடக்கி விட்டு...
அவளை நினைத்துக் கொண்டிருந்ததைப் போலவே
அந்தக் கதையின் நாயகனும்
கதையில் ஒரு புத்தகத்தை வாசித்து விட்டு
அதில் கதாநாயகியின் பெயர் வந்த இடத்தில்
புத்தகத்தை மடக்கி விட்டு
நான் வாசித்த கதையின் நாயகியை நினைத்துக் கொண்டிருந்தான்...
நானும் அந்தக் கதையின் நாயகனும்
கதையில் வரும் நாயகிகளை நினைக்கவே இல்லை....
கதை முடியும் வரை...!
தேவா. சு
Comments
அருமை.