இந்த கவிதையை
அவள் வாசித்து விடக்கூடாது
என்று யோசித்தபடியேதான்
எழுதத் தொடங்கியிருக்கிறேன்....!
நீங்களும் இதை வாசித்து விட்டு
அவளிடம் சொல்லாமலிருக்க வேண்டுமே
என்ற கவலையோடும்,
அவளைப் பற்றிய குறிப்புக்கள் எங்கேனும்
எதேச்சையாக எட்டிப்பார்த்து விடுமோ
என்ற பயத்தோடும் ஒவ்வொரு எழுத்தையும்
ஒரு காட்டு யானையை கட்டி இழுத்து வரும்
பிரயாசயையுடன் கவனமாய்
அடுக்கிக் கொண்டிருக்கிறேன்,
எது எப்படி ஆனாலும்....
இந்தக் கவிதையை வாசிக்கும் யாரும்
அவளிடம் மறந்தும் கூட சொல்லி விடாதீர்கள்...
நான் அவளுக்காக கவிதை ஒன்றை
எழுதி இருக்கிறேன் என்று....
தேவா. S
Comments
எல்லோரிடத்திலும்
இருக்கிறதுதான்.
அதை தைரியமாக ஒப்புக்கொள்கிற பாங்கௌ பலரிடம் இல்லையென்பதே நிஜம்/நல்ல கவிதை வாழ்த்துக்கள்.
எனக்கு கவிதை எழுத தெரியாது என்பதல்ல..
அவளே கவிதை என்று உணர்ந்து இருந்ததனால்!