Skip to main content

அதுவா....?
























ஒரு முறை என்னைப் பார்
என்னை உன் விழிகளால் விழுங்கு
மெளனத்தால் அரவணை
காதுகளுக்குள் கிசு கிசுப்பாய்
காதல் மொழி பேசு...
சில முத்தங்கள் மூலம் எனக்குள்
காதலை பரவ விடு...
சப்தமில்லாமல் சிரி...
உனகானவன் நான் தான்
என்ற உரிமையில்..என்னை
முழுதுமாய் உடைத்துப் போடு!

பற்றிப் பரவும் கொடியின்
காதலில் லயித்துக் கிடக்கும்
ஒரு மரம் போல ...
உன் மொத்தக் காதலும்
என்னை மூர்ச்சையாக்கிப் போனதில்
உணர்வுகளின் சங்கமித்தில்
இசைக்கும் கீதம்... என் உயிரின்
மூலம் தொட்டு தடவுகிறது....!

என் பெயர் சொல்லி
ஓராயிரம் முறை அழைத்து
உன் காதலை என் மீது தெளிக்கிறாய்..
நானோ பார்வைகள் தொலைத்து
சப்தங்கள் இழந்து...சுவாசத்தினூடே
உன் நினைவுகளை என்னுள் பரவவிட்டு
மழை வாங்கும் நிலமாய்...
மெளனித்துக் கிடக்கிறேன்..!

காமத்தின் வேர்கள் அறுக்கப்பட்டதில்
கிளைந்தெழுந்த விருட்சமாய்
வெகுண்டெழுந்த அவதாரமாய்
சுற்றுச் சூழல் மறந்து விசுவரூபத்தில்
வியாபித்து நிற்கிறதே.. ஒன்று....
அதுதானே உன் விழிகளால்
என் விழிகளுக்குள் நீ விதைத்துப் போட்ட
பிரமாண்டக் காதல்..?


தேவா. S

Comments

என் பெயர் சொல்லி
ஓராயிரம் முறை அழைத்து
உன் காதலை என் மீது தெளிக்கிறாய்.///

அவங்க வாசல் தெளித்து கோலம் போட்டு இருப்பாங்க அதானே...?
என் விழிகளுக்குள் நீ விதைத்துப் போட்ட
பிரமாண்டக் காதல்..?///

ஷங்கர் படம்...
உனகானவன் நான் தான்
என்ற உரிமையில்..என்னை
முழுதுமாய் உடைத்துப் போடு///

நேத்து பேசும் போது வீட்டில் ஏதோ உடைக்கிற சப்தம் கேட்டுது அது இது தானா...
உன் நினைவுகளை என்னுள் பரவவிட்டு
மழை வாங்கும் நிலமாய்...
மெளனித்துக் கிடக்கிறேன்..!///

இந்த வரி ரொம்ப சூப்பர் அண்ணா....!
karthikkumar said…
உன் விழிகளால்
என் விழிகளுக்குள் நீ விதைத்துப் போட்ட
பிரமாண்டக் காதல்..//
:))
காதலின் பிரமாண்டத்தை சொல்கிறது,, இந்த பிரமாண்டமான வரிகள்..
உன் விழிகளால்
என் விழிகளுக்குள் நீ விதைத்துப் போட்ட
பிரமாண்டக் காதல்..?

::)))))))))
//உனகானவன் நான் தான்
என்ற உரிமையில்..என்னை
முழுதுமாய் உடைத்துப் போடு!//

உடைத்துப் போட உரிமை கொடுக்கும் காதல் ஒரு உன்னதக் காதல்!

//பற்றிப் பரவும் கொடியின்
காதலில் லயித்துக் கிடக்கும்
ஒரு மரம் போல ...//

கொடி, மரத்தைக் காதல் செய்கிறது என்பதே அற்புதமான கற்பனை. அதற்கும் அதிகமாக அந்தக் கொடி கொண்ட காதலில் லயித்துக் கிடக்கும் மரம்னு எழுதி....... செம தேவா :)

//மழை வாங்கும் நிலமாய்...
மெளனித்துக் கிடக்கிறேன்..!//

காதலை ஏற்றுக்கொண்டதைச் சொல்வதற்கு இதற்குமேல் வேறு வார்த்தைகள் இருக்கமுடியாது தேவா.

கடைசிப்பத்தியில் தெரிகிறது காமம் அற்ற....சாரி., காமம் கடந்த ஒரு காவியக் காதல்!!!

உணர்வுகளை வார்த்தைகளில் வடிப்பது சுலபம் இல்லை. எல்லோருக்கும் சாத்தியப்படுவதில்லை தேவா. WELL DONE!! :) AWAITING MORE SUCH POEMS FROM YOU..
கலக்கல்...

(ஏம்பா இப்படித்தான போடனும்)
Unknown said…
அசத்தல்...
//என் பெயர் சொல்லி
ஓராயிரம் முறை அழைத்து
உன் காதலை என் மீது தெளிக்கிறாய்..
நானோ பார்வைகள் தொலைத்து
சப்தங்கள் இழந்து...சுவாசத்தினூடே
உன் நினைவுகளை என்னுள் பரவவிட்டு
மழை வாங்கும் நிலமாய்...
மெளனித்துக் கிடக்கிறேன்..!//

அசத்தல்.

கலக்கல்.
//கே.ஆர்.பி.செந்தில் said...

அசத்தல்...///

This is sathyaraaj film
உணர்வ மட்டும் அப்படியே பிய்த்து எடுத்து வார்த்தைகளால் எங்களுக்குள்ளும் செலுத்திடுறீங்களே.......
//என் பெயர் சொல்லி
ஓராயிரம் முறை அழைத்து
உன் காதலை என் மீது தெளிக்கிறாய்..
நானோ பார்வைகள் தொலைத்து
சப்தங்கள் இழந்து...சுவாசத்தினூடே
உன் நினைவுகளை என்னுள் பரவவிட்டு
மழை வாங்கும் நிலமாய்...
மெளனித்துக் கிடக்கிறேன்..!
//

சூப்பர் அண்ணா ..!! இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ..!
//அதுதானே உன் விழிகளால்
என் விழிகளுக்குள் நீ விதைத்துப் போட்ட
பிரமாண்டக் காதல்..?
//

இதுவும் கலக்கல் ..!!
nis said…
அசத்தல்
super
அழகான கவிதை! அருமை!
//மழை வாங்கும் நிலமாய்...
மெளனித்துக் கிடக்கிறேன்..!.......அசத்தல்.
வினோ said…
காதலின் அளவா இல்லை அதன் ஆழமா?..
எப்படி பார்த்தாலும் காதல் மட்டுமே உன்னதம்...
Kousalya Raj said…
நேற்று தேடல்.....! இன்று காதல்.....! காதலும் ஒரு தேடல் தானோ...?!

இந்த வரி, அந்த வரி என்று குறிப்பிட்டு சொல்ல இயலாத அளவில் மொத்த கவிதையுமே காதலின் அழகை அப்படியே போட்டு உடைத்திருக்கிறது முகமூடி அணியாமல்... சிறிதும் வேடம் தரிக்காமல்.....இயல்பாய்....அறிவாய்.....ஆத்மார்த்தமாய்.....!! அதிகமாய் ரசித்தேன்....ரசித்துகொண்டிருக்கிறேன்.......!

எதை பற்றி எழுதினாலும் அனைத்தும் சிறப்பாய் எழுத எல்லோராலும் முடியாது....உங்களுக்கு முடிகிறது. வாழ்த்துக்கள்.
@அருண்

//கலக்கல்...

(ஏம்பா இப்படித்தான போடனும்)

//

மச்சி!!! எங்க இருந்தாலும் சீக்கிரமா ஓடு வா. கவிதை விட கமெண்ட்ல வூடு கட்டி விள்ளாடலாம் போல... நிறையா ஆடு மச்சி... :)))))
//உன் மொத்தக் காதலும்
என்னை மூர்ச்சையாக்கிப் போனதில்
உணர்வுகளின் சங்கமித்தில்
இசைக்கும் கீதம்... என் உயிரின்
மூலம் தொட்டு தடவுகிறது....!//

உயிரின் மூலம் தொட்டக்காதல்...உன்னதக் காதல் தான்... :-)

//உன் நினைவுகளை என்னுள் பரவவிட்டு
மழை வாங்கும் நிலமாய்...
மெளனித்துக் கிடக்கிறேன்..!///

அவங்க கூப்பிடுவதுலேயே... மயங்கி போய்... மௌனித்து இருப்பதாய்.. அழகான உணர்வு.. :-))

உங்க கவிதை மொத்தமும் அழகு தான்.. ஏற்ற படமும்... கண்ணே கலைமானே... இசையின் பின்னணியும்.... சூப்பர்ப் :-)
ஹேமா said…
காற்றாகிப் பறக்கும் தேகம்.
பிரமாண்டத்துள் மூழ்கிக்கொண்டிருக்கும் காதல்.
பேதமற்ற உடலுயிர் தழுவிக்கொள்ளும் வாழ்வின் அசாத்திய ஒரு உலகம்.அத்தனையும் உணர்கிறேன் வரிகளுக்குள் !

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...