அது ஒரு ஒற்றையடிப்பாதை, யாருமற்ற வெளி, கடும் கானகத்திற்குள் நான் நகர, நகர நீண்டு கொண்டே இருக்கிறது என் பாதை. எனக்கு ஏதோ ஒன்று வேண்டும், ஏதோ ஒன்றை நான் அடைய வேண்டும். இலக்கு எதுவென்று தெரியவில்லை ஆனால் எங்கோ நான் செல்ல வேண்டும். மனித சஞ்சாரம் அற்ற மரங்கள் அடர்ந்த பட்ட பகலிலும் இருளினைச் சுமந்த ஒரு பெருங்காடு. மனித தொடர்புகளைக் கடந்து நான் வந்து எத்தனை நாளானது, எவ்வளவு மணியானது என்று என்னால் கணிக்க முடியவில்லை. ஆமாம். நவீனத்தின் எந்த ஒரு கருவியையும் என்னோடு நான் இணைத்துக் கொள்ளவில்லை. நானும் மானம் மறைக்க உடுத்தியிருக்கும் ஒற்றை நாலு முழ வேஷ்டியும், ஒரு சட்டையும் காலணியும் எனது உடைமைகளாக் தொற்றிக் கொண்டிருந்தன. அதுவும் கூட ஒரு கட்டத்தில் தேவையற்றுப் போகலாம். நிறைய பேசிவிட்டேன். நிறைய ஆனந்தித்து விட்டேன். நிறைய அழுது விட்டேன். நிறைய கொடுத்து, எடுத்து, ஏதேதோ செய்து, செய்து வாழ்க்கையின் மிகைப்பட்ட நுழைவுகளில் நுழைந்து நுழைந்து வெறுமைகளை கூலிகளாய் பெற்று நிறைவினை எட்ட முடியாமல் தோற்றுதான் போயிருக்கிறேன். உறவுகளில் சந்தோசம் இருந்தது ஆனால் அதைவிட ஒரு படி மேலாக சுயநலங்களும் போலி பகட்டுகளும்,...
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....